பல்லவி
1ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம
சரணம்
சரணம் 1
தப்புலென்ன போதே மாகு கொ3ப்பதனமு ராது3 மா-
யப்ப த3ய சேஸி கண்ட்3ல கப்புகொனி பாலிம்பவே (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸீதா ராம/ ராம/ ராம/ ஸீதா ராம/ ராம/
இராமா/ சீதாராமா/ இராமா/ இராமா/ சீதாராமா/ இராமா/
சரணம்
சரணம் 1
தப்புலு/-என்ன/ போதே/ மாகு/ கொ3ப்பதனமு/ ராது3/ மா/-
தவறுகளை/ எண்ண/ போனால்/ எமக்கு/ மேன்மை/ வாராது/ எமது/
அப்ப/ த3ய/ சேஸி/ கண்ட்3ல/ கப்புகொனி/ பாலிம்பவே/ (ராம)
அய்யனே/ தயவு/ செய்து/ கண்களை/ மூடிக்கொண்டு/ காப்பாயய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம - ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம ராம ஸீதா ராம ராம (சில புத்தகங்களில், பல்லவி சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது).
4 - ஸ்ரீ-பாவ பாவன - ஸ்ரீ-பாப பாவன : 'ஸ்ரீ-பாவ பாவன' என்பதனை 'ஸ்ரீ-ப+அவ+பாவன' என்று பிரித்து பொருள் கொள்ளலாம். ஆனால் 'ஸ்ரீ-பாப பாவன' என்பதற்கு பொருளேதும் இருப்பதாகத்தோன்றவில்லை.
5 - வத்3து3ராத்4யேய த்4யேய - வத்3து3ரா தே4ய தே4ய :'வத்3து3ராத்4யேய த்4யேய' என்பதனை 'வத்3து3ரா+அத்4யேய+த்4யேய' என்று பிரித்து பொருள் கொள்ளலாம். ஆனால் 'வத்3து3ரா தே4ய தே4ய' என்பதனில் 'தே4ய தே4ய' என்பதற்குப் பொருளேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.
6 - ராயாயீ தே3ஹமு - ராமாயீ தே3ஹமு : 'ராயாயீ தே3ஹமு' என்பதற்கு 'இவ்வுடம்பு கல்லா?' என்று பொருளாகும். ஆனால் 'ராமாயீ தே3ஹமு' என்பதனில் உள்ள 'ஈ தே3ஹமு' தனித்து நிற்கின்றது. எனவே அதற்குப் பொருள் கூறவியலாது.
Top
மேற்கோள்கள்
5 - த்4யேய - அறியப்படு பொருள் - கடவுள். இதுகுறித்து, அக்ரூரரின் உரை பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 38 (செய்யுள் 6) நோக்கவும்
5 - அத்4யேய - அறியவியலாதவன் - சொல், மனம், அறிவிற்குப் புறம்பான பரம்பொருள். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (254), பரதேவதைக்கு, 'த்4யான த்4யாத்ரு2 த்4யேய ரூபா' என்று ஓர் பெயருண்டு. இதற்கு 'தியானமும், தியானிப்பவனும், தியானிக்கப்படு பொருளும்' என்று பொருளாகும். இவை மூன்றுமே ஒரே பொருளில் அடக்கமென்றால், அப்பொருளை அறிவதெங்ஙனம்? அதனால் 'அறிவியலாதவன்' என்று பரம்பொருள் கூறப்படும்.
Top
விளக்கம்
2 - மும்மாடிகி - மும்முறை - ஒரு சொல்லினை மும்முறை பகர்தல், அதனை உறுதிப்படுத்தவதாகும்.
3 - பீ4ம நுத - 'பீமனால் போற்றப்பெற்றோன்'. 'பீமன்' என்று சிவனுக்கும் ஓர் பெயருண்டு. ஆனால், அதே சரணத்தில் 'காம வைரி நுத நாம' என்று சிவனைக் கூறப்பட்டுள்ளதால், இங்கு 'பீ4ம' என்ற சொல்லுக்கு 'வல்லோர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தில் 'பீ4ம' என்பது, பாண்டவர் ஐவரில் ஒருவனான 'பீமன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
மற்றவர்களிடம் - மற்ற கடவுளர்களிடம்
காமன் பகைவன் - சிவன்
விடயங்கள் - புலன் நுகர்ச்சி
Top